மேலும் 3 மாதங்களுக்கு வங்கி கடன் தவணை ஒத்திவைக்க வாய்ப்பு

மேலும் 3 மாதங்களுக்கு வங்கி கடன் தவணை ஒத்திவைக்க வாய்ப்பு

வங்கிக் கடன் தவணை கட்டுவதற்கான கால அவகாசம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்று ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால், பொருளாதார செயல்பாடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டன. அதனையடுத்து, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் வங்கிக் கடன் தவணை ஒத்திவைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களுக்கு வங்கிக் கடன் தவனை கட்டுவதற்கு ஒத்திவைக்க அனுமதியளிக்கப்பட்டது.

கொரோனா பாதிப்பு குறையாத நிலையில், சில தளர்வுகளுடன் தற்போது வரை ஊரடங்கு தொடர்கிறது.இந்தநிலையில், எஸ்.பி.ஐ மேற்கொண்ட ஆய்வில், ரிசர்வ் வங்கி மேலும் மூன்று மாதங்களுக்கு வங்கி கடன் தவணையை ஒத்திவைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்