ஒசூர்:
ஒசூர் அருகே கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டத்தை வனத்துறையினர் விரட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கதிரேப்பள்ளி கிராமத்தில் குட்டிகளுடன் 12 காட்டு யானைகள் புகுந்தன. வயல்வெளிகளில் அங்கும் இங்குமாக திரிந்து வருகின்றன.
இந்த யானை கூட்டத்தை காண அங்கு பொதுமக்கள் குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து யானை கூட்டத்தை விரட்ட வனத்துறையினர் முற்பட்டனர். அவற்றை வனப்பகுதிக்கு விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.