சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சாலையோரத்தில் யானைகள் பகல் நேரங்களில் நடமாடி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
யானைகள் சாலையோரங்கள் நிற்பதை வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் படம் எடுத்து வருகின்றனர்.
அப்போது அவர்களை பார்த்து திடிரென்று யானை கூட்டம் விரட்டியுள்ளது. மேலும், அந்த பகுதியில் சென்ற சரக்கு வாகனத்தையும் விரட்டி சென்றுள்ளது.
இதனால் வாகனத்தை வேகமாக இயக்கி யானை கூட்டத்திடம் இருந்து தப்பித்து சென்றுள்ளார். இது தொடர்பாக வனத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் வாகனங்களை இயக்குமாறும், யானைகள் நிற்கும் பகுதியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.