ஒடிசா:
ஒடிசாவில் சீண்டிய வாலிபரை காட்டு யானை ஒன்று ஓட ஓட விரட்டியடித்துள்ளது.
குஜராத்தின் மயூர்பஞ்ச் பகுதியில் விளை நிலத்தில் புகுந்த யானையை கிராம மக்கள் விரட்டினர். அப்போது அந்த யானைகள் மெதுவாக நகர்ந்து வெளியே சென்றது.
ஆனால், அங்கிருந்த வாலிபர்கள் சிலர் யானையை குச்சியால் குத்தி சேட்டை செய்துள்ளனர். இதனால் கோபமடைந்த யானை திடீரென திரும்பி, அந்தத வாலிபர்களை ஓட ஓட விரட்டியடித்தது. யானையின் தாக்குதலால் நிலைகுலைந்த அந்த இளைஞன் அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தான். தற்போது இந்த வீடியோ வைரலாகி பரவி வருகிறது.