ஒசூர்:
ஓசூர் அருகே வனப்பகுதியில் உள்ள கோவிலில் வழிபட சென்ற பெண் ஒருவர், க £ட்டுயானை தாக்கி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மரகட்டா கிராமத்தை சேர்ந்த சரஸ்வதி என்பவர் கூலி,வேலை செய்து வந்துள்ளார்.
இன்று, மரகட்டா கிராமத்தின் அருகே வனப்பகுதியில் அமைந்துள்ள முனீஸ்வரன் கோவிலில் வழிபட சென்றதாக கூறப்படுகிறது.
அவ்வாறு சென்ற சரஸ்வதியை ஒற்றை காட்டுயானை தூக்கி வீசியதில், உடலில் க £யங்களுடன் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மரகட்டா வனப்பகுதியில் பெண் உயிரிழந்திருப்பதாக தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்திருந்த சரஸ்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.