சென்னை மின்சார ரயில் சேவை ரத்து..!

சென்னை மின்சார ரயில் சேவை ரத்து..!

சென்னை:

சுரங்கப்பாதை மற்றும் தண்டவாள பராமரிப்பு காரணமாக சென்ட்ரல் மற்றும் கடற்கரையிலிருந்து செல்லக்கூடிய 46 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை கடற்கரையிலிருந்து அரக்கோணம் வழி தடத்தில் வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை மற்றும் யார்டு தண்டவாள பணியும் இன்று இரவு முதல் நாளை காலை வரை நடக்க உள்ளது. இதனால் மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால், சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர், ஆவடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மறுமார்க்கத்திலும் இன்றும் நாளையும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இதேபோல், நாளை 19ம் தேதி, சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி இடையே பராமரிப்பு பணி நடக்க இருப்பதால் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்