ஒசூர்:
தேன்கனிக்கோட்டை அருகே ஆபத்தான மின் கம்பம் குறித்து புகாரளித்தும் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஒசூர் அருகே உள்ள அஞ்செட்டி – தேன்கனிக்கோட்டை சாலையின் 5வது கிலோமீட்டரில் மின் கம்பம் ஒன்று விழும் நிலையில் உள்ளது. இதன் அடியில் மூங்கில் வளர்ந்து கம்பிகளுக்கு அடியில் உயர்ந்து நிற்கிறது. அருகில் உள்ள நீர் குட்டையில் சிமெண்ட் மின்கம்பம் ஒன்று கம்பிகள் வெளியே தெரியும்படி பழுதடைந்துள்ளது.
இந்த பகுதியில் யானைகள் வரும் பாதை என்பதால், மின் கம்பங்களை சீரமைக்க பிரத்யேக எண்ணான 1912க்கு இதுகுறித்து 2 முறை தெரிவித்தும், மின்வாரிய அதிகாரிகள் ஒரு மாதங்களாக சரிசெய்யவில்லை.
அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த பகுதிகளில் யானைகள் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.