சென்னை:
உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், மாநில தேர்தல் ஆணைய செயலாளராக சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன் இருந்த செயலாளர் பழனிச்சாமி மாற்றம் செய்யப்பட்டு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த சுப்ரமணியன் மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இருந்த அண்ணாதுரை, விழுப்புரம் மாவட்ட ஆட்சியராகவும், தஞ்சாவூர் ஆட்சியராக கோவிந்த ராவ், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.