கொள்ளையர்களை அலறவிடும் முதியோர்

கொள்ளையர்களை அலறவிடும் முதியோர்

நெல்லை:

நெல்லை மாவட்டம், கடயம் அருகே அரிவாளுடன் மிரட்டிய கொள்ளையர்களை முதியோர் தம்பதியினர் அடித்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள் முதியவர் சண்முகவேலின் கழுத்தில் துணியைக்கொண்டு இறுக்கி, அரிவாளால் மிரட்டியுள்ளனர். அப்போது சுதாரித்துக்கொண்ட சண்முகவேலும், அவரது மனை செந்தாமரையும் அடித்து விரட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தள்ளாத வயதில் கையில் இருப்பதைக்கொண்டு கொள்ளையர்களை விரட்டிய வீரம் மிக்க அந்த தம்பதியினரால் மக்களிடையே அதிர்ச்சியும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்