சென்னை:
மாநிலங்களவை தேர்தலுக்கு திமுக சார்பில் மனுதாக்கல் செய்த என்.ஆர்.இளங்கோ தனது வேட்புமனுவை இன்று வாபஸ் பெற்றார்.
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 2 பேரும், கூட்டணி ஒப்பந்தப்படி வைகோவும் மனுதாக்கல் செய்தனர்.
வைகோவுக்கு அவதூறு வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதித்த நிலையில், இவரின் மனு நிராகரிக்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில், மாற்று வேட்பாளராக என்ஆர்.இளங்கோ மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், நேற்று நடந்த பரிசீலனையில் வைகோவின் மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, திமுகவின் என்.ஆர்.இளங்கோ தனது மனுவை இன்று வாபஸ் பெற்றுள்ளார்.