கோவை:
கோவை அருகே ஜெயலலிதா உருவம் பொறித்த 8 டன் கல்லை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.
கோவை – போத்தனூர் பகுதியில் உள்ள உள் விளையாட்டு அரங்குடன், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவ படம் பதித்த 8 டன் கல்லை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார்.
இந்த கல்லில் ஆஞ்சநேயர், கால பைரவர் உருவப்படங்கள் மற்றும் 12 ராசிகள் பதிக்கப்பட்ட இந்த கல்லை, ஏராளமான மக்கள் பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.