துபாய் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

  • In General
  • September 9, 2019
  • 183 Views
துபாய் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

துபாய்:

தமிழகத்தில் தொழில் தொடங்க துபாயில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

முதல் நாளான கடந்த மாதம் 29ம் தேதி, லண்டனில் சுகாதாரத்துறை தொடர்பான மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

செப்டம்பர் 1ம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு உலகம் முழுவதும் உள்ள தமிழ் சங்கங்கள், தொழில் அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்தி, முதலீட்டுத் தூதுவர்களை உருவாக்கி “யாதும் ஊரே” திட்டத்தை முதல்வர் நியூயார்க்கில் தொடங்கிவைத்தார். இதனைத்தொடர்ந்து பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அமெரிக்காவில் கையெழுத்தாகின.

இந்நிலையில், துபாய் சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், தமிழகத்தில் தொழில் தொடங்க துபாய் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்