புதுடெல்லி:
பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நலன் கருதி இ-சிகரெட்டுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தடை விதித்து உத்தவிட்டுள்ளார்.
இதுகுறித்து நிர்மலா சீதாராமன் தெரிவிக்கையில், மாணவர்கள், இ-சிகரெட் பயன்படுத்துவது 77 சதவீதம் அதிகரித்துள்ளது. இ-சிகரெட்டால் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்படுவதால் தடை விதிக்கப்படுகிறது.
மேலும், இ- சிகரெட் ஏற்றுமதி, இறக்குமதி, தயாரிப்புக்கும் தடை விதிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.