வேலூர்:
ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர் கொண்டு சென்றால் போராட்டம் வெடிக்கும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரிதாலும் நிலையில், குடிநீர் தட்டுப்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில், ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டுவரப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுகையில், ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர் கொண்டுசென்றால் திமுக சார்பில் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.