பிரச்சாரத்தில் டூப்ளிகேட் காம்பீரால் பரபரப்பு!

பிரச்சாரத்தில் டூப்ளிகேட் காம்பீரால் பரபரப்பு!

புதுடெல்லி:

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில், பா.ஜ., வேட்பாளர் கவுதம் காம்பீர் டூப்ளிகேட்டை பயன்படுத்தி வருவதாக ஆம்ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

டெல்லியில் கடும் வெயில் வறுத்தெடுத்து வருகிறது. அதிலிருந்து தப்பிக்க, டெல்லி கிழக்கு தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக போட்டியிடும் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் டூப்ளிகேட் காம்பீரை வைத்து பிரச்சாரம் செய்வதாக ஆம்ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதற்கான புகைப்பட ஆதாரத்தையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், காம்பீரை ஆம்ஆத்மி கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், தன் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு காம்பீர் சவால் விடுத்துள்ளார்.

குற்றச்சாட்டை நிரூபித்தால் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக்கொள்கிறேன் எனவும், நிரூபிக்காவிட்டால் ஆம்ஆத்மி தலைவர்கள் அரசியலை விட்டு விலகுவார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்