துபாய் பேருந்து விபத்தில் 8 இந்தியர்கள் பலி..!

துபாய் பேருந்து விபத்தில் 8 இந்தியர்கள் பலி..!

துபாய்:

ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டிலிருந்து துபாய் நகருக்கு அந்நாட்டு அரசு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் 31 பயணிகள் பயணித்த நிலையில், ஷேக் முகமது பின் சயத் சாலையின் அருகே இருந்த விளம்பர பலகை மீது பேருந்து பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடுத்திலேயே 15 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 8 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என இந்திய தூதரகம் அவர்களின் விபரங்களை வெளியிட்டுள்ளது.

ராஜகோபாலன், பெரோஸ் கான் பதான், ரேஷ்மா பெரோஸ் கான், தீபக் குமார், ஜமாலுதீன், கிரண் ஜானி, வாசுதேவ், திலக்ராம் ஜவகர் தாகூர் ஆகிய 8 இந்தியர்கள் பலியானதாக அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள், நண்பர்கள் அவர்களது விவரங்களை பெற இந்திய துணைத்தூதரக அதிகாரியின் செல்போன் எண்ணிலோ, உதவி மையத்தின் எண்ணிலோ தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்