டிஎஸ்பி.,க்கு அரிவாள் வெட்டு

டிஎஸ்பி.,க்கு அரிவாள் வெட்டு

அருப்புக்கோட்டை:

ஒன்றிய குழு மறைமுகத் தேர்தலின்போது ரகளையில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்ற டிஎஸ்பி.,யை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.

அப்போது, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் மர்ம நபர்கள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனை அருப்புக்கோட்டை டிஎஸ்பி., தடுக்க முயன்றுள்ளார். அப்போது, டிஎஸ்பி.,யை மர்மம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர்.

இது தொடர்பாக கலவரத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் இருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்