புதுடெல்லி:
மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.பி. டாக்டர் வீரேந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய எம்.பிக்களுக்கு இடைக்கால சபாநாயகர் வீரேந்திரகுமார் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். மேலும், மக்களவையில் புதிய சபாநாயகர் தேர்வு மற்றும் 17ம் தேதி நாடாளுமன்றத்தின் மக்களவை நடவடிக்கைகளை இவரே கவனிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் திகம்ஹர் தொகுதியில் இருந்து எம்.பி.யாக டாக்டர் வீரேந்திகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.