வகுப்பறையில் போதை மயக்கம்; ஆசிரியர் சஸ்பெண்ட்

வகுப்பறையில் போதை மயக்கம்; ஆசிரியர் சஸ்பெண்ட்

கிருஷ்ணகிரி:

மது போதையில் பள்ளி வகுப்பறையில் மயக்கமடைந்த ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள பனகமுட்லுவைச் சேர்ந்த செல்வம் என்பவர் சந்தாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் மாதத்தில் 15 நாட்கள் மது அருந்திவிட்டு பள்ளிக்கு சரியாக வருவதில்லை. பள்ளிக்கு மது அருந்திவிட்டு வரவதால் புகாரின் பேரில், ஆறு மாத ஊதிய உயர்வை குறைத்து தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் அப்படியும் அவர் திருந்துவதாக தெரியவில்லை.

இந்நிலையில், நேற்று காலை, பள்ளி வகுப்பறையில், மது போதையில், செல்வம் மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து, செல்வத்தை, சஸ்பெண்ட் செய்து, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்