பெங்களூரு:
பெங்களூருவில் வேகமாக வந்த கார், பொதுமக்கள் மீது மோதி பலர் காயமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு நகரின், எச்.எஸ்.ஆர்.லேஅவுட் பகுதியில் உள்ள சாலையில், வேகமாக வந்த கார் நாடைபாதையின் மீது ஏறி பொதுமக்கள் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த காரை ஓட்டிய டிரைவர் குடிபோதையில் இருந்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கோர விபத்தின் சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.