போதையில் பாம்புடன் அட்டகாசம்

போதையில் பாம்புடன் அட்டகாசம்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் மது போதையில் ஒருவர், 7 அடி பாம்புடன் அட்டகாசம் செய்தது பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை புதிய நகராட்சி அலுவலகம் அருகே உள்ள சந்தபேட்டையில், பிரதி வெள்ளிக்கிழமை காய்கறிகள், மீன்கள் உள்ளிட்டவைகள் அனைத்தும் மலிவு விலையில் கிடைக்கம். இதனால் அங்கு பொதுமக்கள் ஏராளமானோர் கூடியிருந்தனர்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஒருவர், மது போதையில் 7 அடி நீளமுள்ள பாம்டை பிடித்துக்கொண்டு, மார்க்கெட்டுக்கு வந்தார். அந்த பாம்பை அங்கிருந்தவர்களிடம் காட்டி மிரட்டி அட்டகாசம் செய்தார். இதனால் அங்கிருந்த பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு நிலவியது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்