தன்னை சீண்டிய பாம்பு; துண்டுதுண்டாக கடித்த நபர்

தன்னை சீண்டிய பாம்பு; துண்டுதுண்டாக கடித்த நபர்

எட்டா:

உத்தரபிரதேச மாநிலத்தில் தன்னை கடித்த பாம்பை ஒருவர் துண்டு துண்டாக கடித்து துப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் எட்டா மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் ஒருவர் தனது வீட்டில் மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது பாம்பு ஒன்று அவரை கடித்தது. இதனால் கோபமடைந்த அவர், அந்த பாம்பை துண்டுதுண்டாக கடித்து துப்பியுள்ளார்.

இதனையடுத்து, குடிபோதையில் இருந்த அந்த நபரை அவரது தந்தை மருத்துவமனையில் கொண்டுசென்று சேர்த்தார். அவர் தற்போது கவலைக்கிடமாக உள்ள நிலையில், அவரது உடல்நலம் மீண்டும் நல்ல நிலைக்கு வர அவரது குடும்பத்தினர், அந்த பாம்பினை முறையாக அடக்கம் செய்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்