அந்தமான்:
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடலோர காவல்படையினர் கடற்படை கப்பல் மூலம் நடுக்கடலில் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த படகு ஒன்றை கடற்படையினர் சோதனை செய்தனர். அந்த படகில் ரூ.1,600 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மியான்மரிலிருந்து அந்தமான் நிகோபார் தீவுகள் வழியாக தாய்லாந்துக்கு கடத்த இருந்தது தெரியவந்துள்ளது. படகிலிருந்த போதைப் பொருட்களை கைப்பற்றிய கடலோர காவல் படையினர், அனைவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய கடலோர காவல் படையின் இந்த முயற்சிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
#WATCH: Indian Coast Guard ship Rajveer detained a Myanmarese vessel operating near Car Nicobar Islands, on 19 Sept. Gunny bags with suspicious packets were found in the vessel, they're being analysed by Narcotics Control Bureau at Port Blair. (18.9) (Source: Indian Coast Guard) pic.twitter.com/OvSn7rh4mP
— ANI (@ANI) September 21, 2019