மும்பை:
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராக அஜித் பாவார் இன்று பதவியேற்கிறார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதனையடுத்து, துணை முதல்வராக அஜித்பவார் மற்றும் 20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் இன்று மதியம் பதவியேற்கின்றனர்.
தேசிய வாத காங்கிரசை சேர்ந்த அஜித் பவார், பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்கச் சென்று அக்கட்சியினரின் எதிர்ப்பை சந்திக்க நேரிட்டது குறிப்பிடத்தக்கது.