சென்னை:
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடவுள்ள திமுக வேட்பாளர்கள் நாளை வேட்புமனுவை தாக்கல் செய்கின்றனர்.
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களான வில்சன், சண்முகம் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் நாளை வேட்புமனுவை தாக்கல் செய்கின்றனர்.
தலைமைச்செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு, சட்டசபை செயலாளரிடம் 3 பேரும் வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளனர்.