ஒசூரில் திமுக ஆர்ப்பாட்டம்

ஒசூரில் திமுக ஆர்ப்பாட்டம்

ஒசூர்:

ஓசூரில், குடியுரிமை திருத்த சட்டம சோதாவை நிறைவேற்றிய மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் இராம் நகரில், திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு, குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை மக்களவைகளில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றியது.

புதிய சட்ட திருத்த சட்டம் முஸ்லிம்கள், இலங்கை அகதிகளாக வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு எதிராக அமைந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வரும்நிலையில், தமிழகத்திலும் மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் அறிவிப்பு செய்திருந்தார்.

அதன் ஒருபகுதியாக திமுகவின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் விலிகி தலைமையில், ஓசூரில் மத்திய,மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் உட்பட 3 திமுக எம்எல்ஏக்கள் என 200க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்