சென்னை:
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திமுக தலைமையில் சென்னையில் பேரணி நடைபெறுகிறது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த பேரணி, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து தாளமுத்து நடராஜன் மாளிகை வரை நடக்கிறது.
பேரணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், விசிக தலைவர் திருமாவளவன், மா.கம்யூ மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மதிமுக தலைவர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
பேரணி நடக்கும் இடத்தில் கலவர தடுப்பு வாகனம் மற்றும் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. எத்திராஜ் சாலை, டேம்ஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலை, புதுப்பேட்டை சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்துள்ளார்.