வாக்குப்பெட்டிகளுக்கு பாதுகாப்பு; திமுக மனு

  • In Chennai
  • December 27, 2019
  • 182 Views
வாக்குப்பெட்டிகளுக்கு பாதுகாப்பு; திமுக மனு

சென்னை:

உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பெட்டிகளுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் கேமரா வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் புதிய மனு அளிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், வாக்குப்பெட்டிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். வாக்குப்பதிவு பெட்டிகள் வைக்கும் அறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். வாக்கு எண்ணிக்கையை அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கண்காணிக்க அனுமதிக்க வேண்டும். திமுக கோரிக்கையின்படி, தேர்தல் ஆணையம் மற்றும் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை டிசம்பர் 30ம் நடைபெறும் உயர்நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்