ஒசூரில் திமுக ஆலோசனை

ஒசூரில் திமுக ஆலோசனை

ஓசூர்:

உள்ளாட்சி தேர்தலையொட்டி ஒசூர் நகர திமுகவின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி முதல்முறையாக மாநகர தேர்தலை சந்திக்க இருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் மூன்று ஆண்டுகளாக நடைப்பெறாமல் இருந்து வருவதால் இந்தாண்டிற்குள்ளாக தேர்தலை முடிக்க மாநில தேர்தல் ஆணையம் மும்முரம் காட்டி வருகின்றது.
டிசம்பர் 2 ல் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளநிலையில், ஓசூர் நகர திமுக சார்பில் வீரர்,வீராங்கணைகள் ஆலோசனை கூட்டம் ஓசூர் எம்எல்ஏ சத்யா தலைமையில் நடைப்பெற்றது.

இதில் பங்கேற்ற திமுக தளி எம்எல்ஏவும், மாவட்ட செயலாளருமான பிரகாஷ், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளும் திமுக கைப்பற்றி நிலையில் ஓசூரில் முதல் மேயராக திமுகவே ஆட்சி வகிக்க வேண்டும் அதற்கான பணிகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வேப்பனஹள்ளி எம்எல்ஏ முருகன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்