சென்னை:
தேர்தல் முடிவுக்கு பிறகு கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் கூட்ட மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
வரும் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கூட்டணி கட்சியின் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. அதற்கான அழைப்பிதழை மு.க.ஸ்டாலிக்கு சோனியா காந்தி அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், இந்த கூட்டத்தில் கலந்துகொள்வது குறித்தும், தேர்தலுக்கு பிறகு அமையவுள்ள ஆட்சியில் பங்கேற்பது குறித்தும் ஆலோசனை நடத்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த திமுக தலைமை முடிவு செய்துள்ளது.