சென்னை:
சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் திமுக வழக்கறிஞர் பிரிவினர் புகார் அளித்துள்ளனர்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிகளவில் வெளியூர்வாசிகள் தங்கியுள்ளதாகவும், அவர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று, அதிமுகவிற்கு வாக்களிக்கும்படி வாக்காளர்களை வலியுறுத்துவதாகவும் திமுகவினர் புகாரளித்துள்ளனர்.