மாநில தேர்தல் ஆணையர் மீது திமுக வழக்கு

  • In Chennai
  • December 16, 2019
  • 184 Views
மாநில தேர்தல் ஆணையர் மீது திமுக வழக்கு

சென்னை:

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி மீது உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் முறையாக வார்டு மறுவரையறைகள் செய்யப்படவில்லை எனவும், சுழற்சி முறை இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என கூறி உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்திருந்தது.

இதற்கு 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் வார்டுகள் வரையறை செய்யப்பட்டு தேர்தல் நடத்தப்படுவதாக தமிழக அரசு விளக்கம் அளித்தது. இதனை ஏற்ற உச்சநீதிமன்றம், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடை இல்லை என தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை திமுக தொடர்ந்துள்ளது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் வார்டுகள் மறு வரையறை செய்யப்படவில்லை என்றும், சுழற்சி முறையில் இடஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் மனுவில் முறையிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்