சென்னை:
சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்எஸ்ஐ., வில்சன் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ..5 லட்சம் வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக கேரள எல்லையான களியாக்காவிளையில் சோதனை சாவடியில்,, மர்ம நபர்களால் சிறப்பு எஸ்ஐ., வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், எஸ்.எஸ்.ஐ., வில்சன் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். வில்சன் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையில் பணிபுரிவோர் கொல்லப்படுவது இதுவே கடைசியாக இருக்கவேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.