அன்பு அதிகமாக காட்டிய கணவனுக்கு ஏற்பட்ட பரிதாபம்

அன்பு அதிகமாக காட்டிய கணவனுக்கு ஏற்பட்ட பரிதாபம்

துபாய்:
நாம் இதுவரைக்கும் எவ்வளவோ விவாகரத்து ஆனது பற்றி கேள்வி பட்டிருப்போம். ஆனால் தற்போது கணவரின் அதிகமான அப்பை தாங்க முடியாமல் இளம் பெண் ஒருவர் விவாகரத்துகோரி வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த இளம் பெண் ஒருவர், சார்ஜா நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அதில் எங்களுக்கு திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகிறது. கணவர் என்னிடம் ஒருபோதும் சத்தம் போட்டதில்லை. என்னை நிராகரிக்கவில்லை.

எப்போதுமே என்னை காதலித்துக் கொண்டே இருக்கிறார். அவரது அதிக அன்பு என்னை திக்கு முக்காட வைத்துள்ளது.

எனவே எனது கணவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை கேட்டு நீதிபதி மட்டும் இல்லாமல் பொதுமக்களும் ஆச்சரியாக பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது பற்றி அவரது கணவர் கூறும்போது: எனது மனைவிக்கு அறிவுரை சொல்லி, வழக்கை வாபஸ் வாங்க வையுங்கள் என்று கூறியுள்ளார்.

நீதிபதி இந்த வழக்கைத் சில வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்