சென்னை:
தமிழகத்தில் மாவட்டம் தோறும் ஒவ்வொரு மாதமு களஆய்வு செய்ய வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட கலெக்டர்கள் மாநாடு இன்று சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர், தமிழக அரசின் திட்டங்கள் செயல்படும் விதம் குறித்து ஒவ்வொரு மாதமும் களஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஆய்வு நடத்திய ஆய்வறிக்கையை மாதந்தோறும் என்னுடைய அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட கலெக்டர்கள் கூட்டத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.