தகுதிநீக்க எம்எல்ஏக்கள் பா.ஜ.,வில் நாளை இணைவு

தகுதிநீக்க எம்எல்ஏக்கள் பா.ஜ.,வில் நாளை இணைவு

பெங்களூரு:

கர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் நாளை பா.ஜ., கட்சியில் இணைவுள்ளதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.

கர்நாடக மாநிலத்தில் ம.ஜ.த., மற்றும் காங்கிரஸ் கட்சியின் 17 எம்எல்ஏக்கள் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், 17 பேரும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, தகுதிநீக்க எம்எல்ஏக்கள் 17 பேரும் பா.ஜ., கட்சியில் இணைக்க முதல்வர் எடியூரப்பா, தலைமையிடம் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடியூரப்பா, தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் நாளை பா.ஜ., கட்சியில் இணையப்போவதாக தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்