திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பல்வேறு பிரச்சனைகள் நீடித்து வரும் நிலையில், நடிகர் விஷாலின் ‘அயோக்யா’ படம் திட்டமிட்டபடி நேற்று வெளியாகவில்லை. இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றும் வெளியாகவில்லை.
எங்கு சென்றாய் என் உயிரே, உண்மையின் வெளிச்சம், வேதமானவள், கீ, காதல் முன்னேற்றக்கழகம் ஆகிய படங்கள் மட்டும் இன்று வெளியாகின.
இந்நிலையில், ‘எங்கு சென்றாய் என் உயிரே’ படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளருமான பாண்டி, தியேட்டர் ஒன்றின் வாசலிலேயே நின்றுகொண்டு, தன்னுடைய படத்தை பார்க்க வாங்க என்றும், தானே டிக்கெட் வாங்கி குறைந்த விலைக்கு கொடுத்தும், படம் பிடிக்கவில்லை என்றால் ரூ.100 கொடுக்கிறேன் என ரசிகர்களை கூப்பாடு போட்டு கெஞ்சியுள்ளார்.
ஒரு படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரே இப்படி கூப்பிடுவதை பார்த்து ரசிகர்கள் வருத்தத்துடன் பார்த்து சென்றனர்.