பெங்களூரு:
மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
மக்களின் தீர்ப்புக்கு எதிராகவும், அரசியலமைப்பு சட்டப்படியும் அமைந்த அரசை கவிழ்க்க செய்த எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் ரமேஷ்குமார் சரியான தண்டனையை வழங்கியுள்ளார்.
பா.ஜனதாவின் ஆபரேஷனுக்கு உள்ளானவர்களுக்கு இது ஒரு சரியான பாடம். இவ்வாறு தினேஷ் குண்டுராவ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.