போபால்:
காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர். அவர் எப்போதும் தேச பக்தராகவே நினைவுகூறப்படுவார் என்று போபால் பா.ஜ.., வேட்பாளர் சாத்வி பிரக்யா சிங் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து போபால் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கூறுகையில், கோட்சே பற்றிய போபால் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங்கின் கருத்திற்கு பிரதமர் மோடி, அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும். நாதுராம் கோட்சே ஒரு கொலையாளி; அவரை போற்றுவது தேசபக்தியல்ல, தேசதுரோகம் என அவர் தெரிவித்துள்ளார்.