கொரோனா வைரஸ் அடிக்கடி தன்னைத் தானே உருமாற்றம் செய்து கொள்வதால், கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது என்ற கருத்து தற்போது வலுத்துள்ளது.
உலகம்முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் இரண்டாவது அலையாக பாதிக்கும் என்ற கருத்தை பெரும்பாலான நாட்டின் மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். ஹாங்காங் நாட்டில் ஒருவருக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்பட்டு இருந்தது. இதை நிரூபிக்கும் வகையில் கொரோனா வைரஸ் புரோட்டீன் உருமாற்றமும் சாத்தியமாகிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.