பாக்., வீரர்களுக்கு பிரியாணி கிடையாது

  • In Sports
  • September 17, 2019
  • 194 Views
பாக்., வீரர்களுக்கு பிரியாணி கிடையாது

இஸ்லாமாபாத்:

உள்ளூர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு உணவு கட்டுப்பாடுகளை புதிய பயிற்சியாளர் மிஷ்பா விதித்துள்ளார்.

தற்போது உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு பிரியாணி, எண்ணெயில் பொறித்த உணவுகள் ஆகியவற்றை சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே உணவு கட்டுப்பாடுகளை தேசிய அணியிலும் விரைவில் கடைபிடிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் வீரர்கள் சரியான உணவு முறையை கடைப்பிடிக்காமல், எண்ணெய், ஜங் உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.

இவர்களது உணவுமுறையை ஒழுங்குப்படுத்த லாக் புக் ஒன்று பராமரிக்கப்பட உள்ளது. அதனை கடைப்பிடிக்காதவர்கள் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என மிஷ்பா எச்சரிக்கை விடுத்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்