துபாய் – ஜெய்ப்பூர் விமானத்தின் டயர் வெடித்தது..! பயணிகள் பத்திரமாக மீட்பு..!!

துபாய் – ஜெய்ப்பூர் விமானத்தின் டயர் வெடித்தது..! பயணிகள் பத்திரமாக மீட்பு..!!

ஜெய்ப்பூர்:

துபாயிலிருந்து ஜெய்ப்பூர் வந்த விமானத்தின் டயர் வெடித்ததால், பத்திரமாக தரையிரக்கப்பட்டது.

ஸ்பைஸ் ஜெட் எஸ்ஜி 58 ரக விமானம், இன்று காலை 189 பயணிகளுடன் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தரையிரக்கப்பட்டது. அப்போது அதன் டயர் ஒன்று வெடித்தது. இதனையடுத்து விமான ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் விமானம் ஓடுதளத்தில் பத்திரமாக தரையிரக்கப்பட்டது.

இதிலிருந்த 189 பயணிகளும் பத்திரமாக இறக்கிவிடப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விமான நிலைய போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்