ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று ஐதராபாத்தில் நடந்தது. இதில் ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை, மும்பை இண்டியன்ஸ் வெற்றி பெற்று 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
வெற்றிபெற்ற மும்பை இண்டியன்ஸ் அணிக்கு முதல் பரிசாக ரூ.20 கோடி மற்றும் கோப்பையும், 2ம் இடத்தை பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 12 கோடியே 50 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
இந்நிலையில், இறுதிப்போட்டியில் ரன்அவுட்டான தோனிக்கு தவறாக அவுட் கொடுத்ததாக அம்பயர் மீது ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும், தோனி அவுட் குறித்து சிறுவன் ஒருவன் பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதில், தோனி அவுட்டே இல்லை, சும்மானா அவுட்டுன்னு கொடுக்கிறான். 3வது அம்பயன் தூக்கு மாட்டி செத்துடுவான் என்று அழுதுகொண்டே கூறும்போது, அச்சிறுவனின் தாய் சமாதானப்படுத்துகிறார்.