நீட் மோசடி.. மருத்துவக் கல்லூரியிலிருந்து நீக்கம்

நீட் மோசடி.. மருத்துவக் கல்லூரியிலிருந்து நீக்கம்

தருமபுரி:
நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவன் இர்ஃபான் தருமபுரி மருத்துவக்கல்லூரியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

தேனியில் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பலர் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

இதனை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர். அப்போது தருமபுரி மருத்துவக்கல்லூரியில் இர்ஃபான் என்ற மாணவன் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து மாணவன் இர்ஃபான் தலைமறைவானார். அவர் சேலம் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சிவா முன்னிலையில் சரணடைந்தார்.

இந்நிலையில், தருமபுரி மருத்துவக் கல்லூரியில் இருந்து இர்ஃபான் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து பல்வேறு மருத்துவக்கல்லூரியில் மாணவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்