மும்பை:
மகாராஷ்டிராவில் திடீர் திருப்பமாக பா.ஜ.,வை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.
மகாராஷ்டிராவில் நீண்ட இழுபறிக்கு பிறகு தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் பா.ஜ.,வின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பகத்சிங் கோசியாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். துணை முதல்வராக தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் பதவியேற்றுக்கொண்டார்.
நேற்று சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் தற்போது திடீரென பா.ஜ.,வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
#WATCH Mumbai: Devendra Fadnavis takes oath as Maharashtra Chief Minister again, oath administered by Governor Bhagat Singh Koshyari at Raj Bhawan. pic.twitter.com/kjWAlyMTci
— ANI (@ANI) November 23, 2019