காங்.,கிற்கு ‘குட்பை’

காங்.,கிற்கு ‘குட்பை’

பெங்களூரு:

கர்நாடகாவில் காலியாக உள்ள 15 சட்டசபை தொகுதிகளிலும் மஜத தனித்தே போட்டியிடும் என அக்கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் -மஜத எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகின்றன.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களின் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அவர்கள் இந்த தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் குறித்து தேவகவுடா கூறுகையில், கர்நாடகாவில் காலியாக உள்ள 15 சட்டசபை தொகுதிகளிலும் மஜத தனித்தே போட்டியிடும் எனவும், காங்கிரஸ் கூட்டணியில் அனுபவித்துவந்த துயரங்கள் மீண்டும் நிகழக்கூடாது எனவும் குமாரசாமி நினைப்பதாக தேவகவுடா தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்