சென்னையில் தடம்புரண்ட சரக்கு ரயில்..!

சென்னையில் தடம்புரண்ட சரக்கு ரயில்..!

சென்னை:

சென்னை கொருக்குப்பேட்டையில் சரக்கு ரயில் திடீரென தடம்புரண்டதால் பயணிகள் ரயில் சேவை 3 மணி நேரம் பாதிப்புக்குள்ளானது.

சென்னையின் தண்டையார் பேட்டையிலிருந்து மதுரைக்கு சென்ற சரக்கு ரயில் கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது. இதனால், சென்னையிலிருந்து கும்மிடிப்பூண்டி மார்கத்தில் புறநகர் ரயில்கள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டன.

சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தண்டவாளங்கள் சரிசெய்யப்பட்டு அந்த மார்கத்தில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டன. இந்த விபத்தால் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்