புதுடெல்லி:
பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ராணுவ விவகாரம் என்ற தனித்துறை உருவாக்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ராணுவ விவகாரம் என்ற தனித்துறை உருவாக்கப்பட உள்ளது. முப்படைகளுக்கும் நியமிக்கப்படும் தலைமை தளபதி, ராணுவ விவகாரம் என்ற தனி துறைக்கான தலைவராகவும் செயல்படுவார் என அவர் தெரிவித்தார்.
மேலும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்கும் பணிக்காக ரூ.8,500 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது எனவும், மக்கள்தொகை பதிவேடு தொடர்பாக யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.