டெங்கு நடவடிக்கை; தமிழக அரசு உத்தரவு

  • In Chennai
  • October 16, 2019
  • 192 Views
டெங்கு நடவடிக்கை; தமிழக அரசு உத்தரவு

சென்னை:

தமிழகத்தில் வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சல் நடவடிக்கை குறித்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பரவிவரும் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்துவது குறித்த மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், டெங்கு காய்ச்சலை கட்டுக்குள் கொண்டுவர நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மற்றும் ஒன்றியங்கள் வாரியாக குழுக்கள் அமைத்து கண்காணிப்பு நடவடிக்கையிலும், கொசு ஒழிப்பு பணியிலும் ஈடுபடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சல் நடவடிக்கை குறித்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தலைமை செயலாளர் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்