டெங்கு காய்ச்சல்; கலெக்டர் ஆய்வு

டெங்கு காய்ச்சல்; கலெக்டர் ஆய்வு

ஒசூர்:

ஒசூர் அருகே டெங்கு காய்ச்சல் பரவியதால் அங்கு மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வில் ஈடுபட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி அருகே உள்ள கோவிந்தபுரம் கிராமத்தை சேர்ந்த ரகு (22) என்பவர் டெங்கு காய்ச்சலில் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பினார்.

இந்நிலையில், தற்போது அதே கோவிந்தபுரம் கிராமத்தில் மேலும் இருவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாக வந்த தகவலையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் கோவிந்தபுரம் கிராமத்தில் ஆய்வு மேற்க்கொண்டார்.

டெங்கு அறிகுறியாக இருந்த ராஜேந்திரன், மோகனா ஆகியோரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக தருமபுரிக்கு அனுப்பி வைத்த அவர், கிராம முழுவதும் சுத்தப்படுத்தும் பணிகளை மேற்க்கொள்ள சுகாதார ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்